கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர் பணி இடை நீக்கம்..!!

மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.


கோவை: கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியரை பணி இடை நீக்கம் செய்து வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை வடக்கு டாஸ்மாக் கடை எண் 1,540-ல் பணிபுரிந்த மனோகரன் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையடுத்து, கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் பாபு இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மனோகரனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...