மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
கோவை: கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியரை பணி இடை நீக்கம் செய்து வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை வடக்கு டாஸ்மாக் கடை எண் 1,540-ல் பணிபுரிந்த மனோகரன் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் பாபு இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மனோகரனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை வடக்கு டாஸ்மாக் கடை எண் 1,540-ல் பணிபுரிந்த மனோகரன் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன், மது வாங்க வரும் நபர்களிடம் அலட்சியமாக பேசி வந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் பாபு இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர் மனோகரனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.