கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 131 சவரன் நகையை திருடி மர்ம நபர்கள் கைவரிசை..!!

கைரேகை பதிவுகளையும் மற்றும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 131 சவரன் நகை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் வேலவன் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரது மகன் தினகரன் (44) தனது மனைவி இரு குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இவர் வெள்ளக்கிணறு பகுதியில் தினகரன் என்ற பெயரில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பியவர், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 



உடனடியாக தினகரன் வீட்டினுள் சென்று பார்த்தபோது முன் அறையில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது மற்றும் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 10 சவரன் மாங்கா மாலை, 10 சவரன் தங்க ஆரம், 28 சவரன் வளையல், 20 சவரன் கம்மல் செட், 10 பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் உள்ளிட்ட மொத்தம் 131 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.



இதனையடுத்து, தினகரன் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்ததுடன் கைரேகை பதிவுகளையும் மற்றும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே இக்கொள்ளை சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் காவல்துறை சரியான ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...