கோவை வாலிபருடன் காதல் வலையில் சிக்கிய சிறுமி.! தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணன்.!!

கோவையில் வசிக்கக்கூடிய காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த 10-ம் வகுப்பு படிக்க கூடிய 16-வயது தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த அண்ணன் கைது.


கோவை: கோவையில் வசிக்கக்கூடிய காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த 10-ம் வகுப்பு படிக்க கூடிய 16-வயது தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற அண்ணன் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கிலியம்மாள், இவர்களுக்கு கார்த்திக் வயது 20, என்ற மகனும் காயத்ரி 16, என்ற மகளும் உள்ளனர்.

காயத்ரி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே மாற்றுத்திறனாளியான சங்கிலி அம்மாள் தனது 2-குழந்தைகளையும் வளர்த்து வந்தார். குடும்ப வருமானத்துக்காக கார்த்திக் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காயத்ரி தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். அவர் யாரிடம் பேசுகிறார் என உறவினர்கள் கேட்டபோது கோவையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வருவதும் அவர் காதலித்து வந்தது தெரிய வந்தது.

பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் உறவு முறையைக் கொண்ட பாலமுருகன் என்பவர் கண்டித்தார். இருந்தபோதும் தொடர்ந்து காயத்திரி தனது காதலுடன் செல்போனில் பேசி வந்தார்.

நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு காயத்ரி தனது காதலனுடன் பேசியுள்ளார். இதனை கவனித்த பாலமுருகன் அவரை கண்டித்துள்ளார். அத்துடன் தாக்க ஆரம்பித்து கழுத்தை நெரித்து செல்போனை பிடுங்கி உடைத்தெறிந்து உள்ளார். காயத்ரி சுய நினைவின்றி மயங்கி விழுந்தார்.

வீட்டிலிருந்தவர்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவருடன் செல்போனில் பேசிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...