கோவை வாலிபருடன் காதல் வலையில் சிக்கிய சிறுமி.! தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணன்.!!

கோவையில் வசிக்கக்கூடிய காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த 10-ம் வகுப்பு படிக்க கூடிய 16-வயது தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த அண்ணன் கைது.


கோவை: கோவையில் வசிக்கக்கூடிய காதலனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த 10-ம் வகுப்பு படிக்க கூடிய 16-வயது தங்கையை அடித்து கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற அண்ணன் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கிலியம்மாள், இவர்களுக்கு கார்த்திக் வயது 20, என்ற மகனும் காயத்ரி 16, என்ற மகளும் உள்ளனர்.

காயத்ரி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே மாற்றுத்திறனாளியான சங்கிலி அம்மாள் தனது 2-குழந்தைகளையும் வளர்த்து வந்தார். குடும்ப வருமானத்துக்காக கார்த்திக் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காயத்ரி தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். அவர் யாரிடம் பேசுகிறார் என உறவினர்கள் கேட்டபோது கோவையைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வருவதும் அவர் காதலித்து வந்தது தெரிய வந்தது.

பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது அண்ணன் உறவு முறையைக் கொண்ட பாலமுருகன் என்பவர் கண்டித்தார். இருந்தபோதும் தொடர்ந்து காயத்திரி தனது காதலுடன் செல்போனில் பேசி வந்தார்.

நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு காயத்ரி தனது காதலனுடன் பேசியுள்ளார். இதனை கவனித்த பாலமுருகன் அவரை கண்டித்துள்ளார். அத்துடன் தாக்க ஆரம்பித்து கழுத்தை நெரித்து செல்போனை பிடுங்கி உடைத்தெறிந்து உள்ளார். காயத்ரி சுய நினைவின்றி மயங்கி விழுந்தார்.

வீட்டிலிருந்தவர்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவருடன் செல்போனில் பேசிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...