ஆலாந்துறை காவல் நிலைய பெண்கள் உதவி மைய ஏட்டு ஜானகி, கான்ஸ்டபிள் சுகன்யா ஆகிய இருவரும், கவுன்சிலிங் கொடுத்தனர்.
கோவை: கோவையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிய பெண்ணை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் கோல்கட்டாவுக்கு பணிக்காக சென்ற போது, அங்குள்ள பூஜா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் கோவை நரசீபுரம் வந்து கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு ஆலாந்துறை காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு கணவருடன் செல்ல விருப்பமில்லை எனவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பூஜா தெரிவித்தார்.
இதையடுத்து, ஆலாந்துறை காவல் நிலைய பெண்கள் உதவி மைய ஏட்டு ஜானகி, கான்ஸ்டபிள் சுகன்யா ஆகிய இருவரும், கவுன்சிலிங் கொடுத்தனர்.
பின்னர், 7 மாதம் கர்ப்பமாக இருந்த பூஜா முகாமில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டார். அவருக்கு கடந்த, 1ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., சுஹாசினி அறிவுரைப்படி, பூஜாவுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, கணவருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, கவுன்சிலிங் வழங்கி பூஜாவை மீட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் கோல்கட்டாவுக்கு பணிக்காக சென்ற போது, அங்குள்ள பூஜா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் கோவை நரசீபுரம் வந்து கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு ஆலாந்துறை காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு கணவருடன் செல்ல விருப்பமில்லை எனவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பூஜா தெரிவித்தார்.
இதையடுத்து, ஆலாந்துறை காவல் நிலைய பெண்கள் உதவி மைய ஏட்டு ஜானகி, கான்ஸ்டபிள் சுகன்யா ஆகிய இருவரும், கவுன்சிலிங் கொடுத்தனர்.
பின்னர், 7 மாதம் கர்ப்பமாக இருந்த பூஜா முகாமில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டார். அவருக்கு கடந்த, 1ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., சுஹாசினி அறிவுரைப்படி, பூஜாவுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, கணவருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, கவுன்சிலிங் வழங்கி பூஜாவை மீட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.