கோவையில் பொது மக்களை குறிவைக்கும் செல்போன் திருடன்..!!

கோவை ரயில் நிலையத்தில் அவசரமாக போன் பேச செல்போன் கேட்டு மாயமாய் மறைந்த செல்போன் திருடனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் அவசரமாக போன் பேச செல்போன் கேட்டு மாயமாய் மறைந்த செல்போன் திருடனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சோமனூரை சேர்ந்தவர் சஞ்சய் வயது 21, இவர் இன்று காலை ரயில் நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது அங்கே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருகே வந்து போன் அவசரமாகப் பேச வேண்டும். உதவுமாறு கேட்டார், சஞ்சயும் அவர் பரிதாபமாக இருந்தால் கொடுத்தார்.

அந்த நபர் போன் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் சஞ்சை அசந்த நேரம் பார்த்து அங்கிருந்து மாயமாய் மறைந்தார். சிறிது நேரம் கழித்து சந்தேக நபரைத் தேடிப் பார்த்தார் அப்போது அவர் காணவில்லை.

தனது செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. சஞ்சய் இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தந்தையிடம் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...