கோவை ரயில் நிலையத்தில் அவசரமாக போன் பேச செல்போன் கேட்டு மாயமாய் மறைந்த செல்போன் திருடனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை ரயில் நிலையத்தில் அவசரமாக போன் பேச செல்போன் கேட்டு மாயமாய் மறைந்த செல்போன் திருடனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோமனூரை சேர்ந்தவர் சஞ்சய் வயது 21, இவர் இன்று காலை ரயில் நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது அங்கே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருகே வந்து போன் அவசரமாகப் பேச வேண்டும். உதவுமாறு கேட்டார், சஞ்சயும் அவர் பரிதாபமாக இருந்தால் கொடுத்தார்.
அந்த நபர் போன் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் சஞ்சை அசந்த நேரம் பார்த்து அங்கிருந்து மாயமாய் மறைந்தார். சிறிது நேரம் கழித்து சந்தேக நபரைத் தேடிப் பார்த்தார் அப்போது அவர் காணவில்லை.
தனது செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. சஞ்சய் இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தந்தையிடம் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோமனூரை சேர்ந்தவர் சஞ்சய் வயது 21, இவர் இன்று காலை ரயில் நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது அங்கே 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருகே வந்து போன் அவசரமாகப் பேச வேண்டும். உதவுமாறு கேட்டார், சஞ்சயும் அவர் பரிதாபமாக இருந்தால் கொடுத்தார்.
அந்த நபர் போன் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் சஞ்சை அசந்த நேரம் பார்த்து அங்கிருந்து மாயமாய் மறைந்தார். சிறிது நேரம் கழித்து சந்தேக நபரைத் தேடிப் பார்த்தார் அப்போது அவர் காணவில்லை.
தனது செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. சஞ்சய் இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தந்தையிடம் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.