மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 152வது பிறந்தநாள் விழா வால்பாறை நகராட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், சுதாகர், நகராட்சி அலுவலர் சரவணன் உட்பட ஏராளமானவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.