திருப்பூரில் குளத்தைச்சுற்றி தடுப்புச்சுவர் அமைத்துத் தரக்ககோரி ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் திருப்பூர் மாவட்டம் கருமஞ்சோறைப் பகுதியில் குளத்தைச்சுற்றி தடுப்புச்சுவர் அமைத்துத் தரக்ககோரி ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரையடுத்த கருமஞ்செறை ஊராட்சிப் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி ஒன்று உள்ளது.

இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பு பகுதிகளானது குளத்தை ஒட்டியுள்ளதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தைச் சந்திப்பதாகவும், விரைவில் குளங்கள் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுவதாக குற்றச்சாட்டினை மக்கள் முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நேற்று தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாகவும், இதனால் வீட்டில் இருந்த ரேசன் கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப்பிரச்சனை பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் நிலையில் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவி நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் தான் இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கரும்பஞ்செறை பகுதியைச்சேர்ந்த 100 க்கு மேற்பட்ட மக்கள் நேரில் வந்து மனு அளித்தனர். மேலும் இந்த மனுவில் மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...