கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்ய கோரிக்கை..!

பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்திடக் கோரி, பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு அனைத்து வட்டங்களிலும் ஒரு வட்டத்திற்கு 2 அல்லது 3 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் அனைத்தும் கடந்த ஓராண்டாக நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படாமல் இருந்தது.



தற்பொழுது, ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் இந்த பூங்காக்கள் அனைத்தும் புதர் மண்டி, செடி, கொடிகள் வளர்ந்து புழு மற்றும் பூச்சிகள் அதிக அளவில் நிறைந்தும் மக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

அதுபோலவே, இந்த பூங்காக்களை பராமரிப்பதற்குத் தனி காவலாளிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு மாதாமாதம் சரியான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது யார் பராமரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதனால், நடை பயிற்சிக்குச் செல்ல முடியாமலும், உடற்பயிற்சிக்குச் செல்ல முடியாமலும் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, மாநகராட்சி ஆணையர் உடனடியாக தலையிட்டு பூங்காக்களை சுத்தம் செய்தும், அதற்குரிய பாதுகாவலர்களை கொண்டு பராமரிக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...