கோவையில் பேராசிரியருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 1.39 லட்சம் மோசடி செய்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் பேராசிரியருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 1.39 லட்சம் மோசடி செய்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் தைச் சேர்ந்தவர் அன்புமணி வயது 60, ஓய்வு பெற்ற பேராசிரியர், கடந்த 24-ஆம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
இதனை அன்புமணி பார்த்தார். இதில் லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. அதில் உங்களது வங்கிக் கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் உள்ளது.
எனவே, இந்த லிங்கை அழுத்தி பான் கார்டு எண்ணை பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்புமணி அந்த லிங்கில் பதிவு செய்தார். பதிவு செய்த சில மணி நேரத்தில் அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1-லட்சத்து 39-ஆயிரத்து 794- எடுக்கப்பட்டது.
இதில் அதிர்ச்சி அடைந்த அன்புமணி இது தொடர்பாகக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் இன்று புகார் செய்தார். காவல்துறை புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் தைச் சேர்ந்தவர் அன்புமணி வயது 60, ஓய்வு பெற்ற பேராசிரியர், கடந்த 24-ஆம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
இதனை அன்புமணி பார்த்தார். இதில் லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. அதில் உங்களது வங்கிக் கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் உள்ளது.
எனவே, இந்த லிங்கை அழுத்தி பான் கார்டு எண்ணை பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்புமணி அந்த லிங்கில் பதிவு செய்தார். பதிவு செய்த சில மணி நேரத்தில் அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1-லட்சத்து 39-ஆயிரத்து 794- எடுக்கப்பட்டது.
இதில் அதிர்ச்சி அடைந்த அன்புமணி இது தொடர்பாகக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் இன்று புகார் செய்தார். காவல்துறை புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.