கோவை மத்திய சிறை கைதிகளுக்கிடையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கும், செல்போன் பயன்பாடும் அதிகரித்துவருவதாக எழும் குற்றச்சாட்டையடுத்து ரோஸ்கோர்ஸ் காவல்நிலைய போலீசார் இன்று ஒரு நாள் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சிறைகளில் கோவை மத்திய சிறையும் ஒன்று. கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு வழக்குகளில் கைதான சுமார் 1500க்கு மேற்பட்ட கைதிகள் இச்சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் கோவை சிறையில் சமீப காலங்களாக கைதிகளுக்கிடையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரிப்பதாகவும், அதே வேளையில் செல்போன் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துவருகிறது. இதனையடுத்து தான் ஒவ்வொரு மாதமும் கோவை மத்திய சிறை வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தான் இன்று தீடிரென உதவி ஆணையர் சதீஷ்குமார தலைமையில் சுமார 30 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையில் கைதிகளின் உடைமைகள் மற்றும் அவர்களது அறைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் தடை செய்யப்பட்ட எந்தப்பொருள்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கோவை சிறையில் சமீப காலங்களாக கைதிகளுக்கிடையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரிப்பதாகவும், அதே வேளையில் செல்போன் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துவருகிறது. இதனையடுத்து தான் ஒவ்வொரு மாதமும் கோவை மத்திய சிறை வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தான் இன்று தீடிரென உதவி ஆணையர் சதீஷ்குமார தலைமையில் சுமார 30 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையில் கைதிகளின் உடைமைகள் மற்றும் அவர்களது அறைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் தடை செய்யப்பட்ட எந்தப்பொருள்களும் கிடைக்கவில்லை.