போத்தனூரில் உள்ள இடைத்தரகர் வீட்டிற்குச் சென்ற விவசாயிகள் வீட்டின் முன்பு நிலுவைத் தொகை ரூபாய் 84-ஆயிரத்தை உடனடியாக அளிக்க வேண்டும் எனக் கோரி பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: வெண்பட்டு கூடு விற்று பணம் கேட்டு இடைத்தரகர் வீட்டு முன்பு விவசாயிகள் பாய்விரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சின்னவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் காளியப்பன் (45), செண்ணியப்பன் (42), காளிமுத்து (52), விவசாயிகளான இவர்கள் தங்கள் நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்று விவசாயிகளும் தன் நிலத்தில் விளைந்த வெண்பட்டு கூடுகளைக் கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலை இடைத்தரகர் இடம் கொடுத்தனர்.
இதற்கு ரூபாய் 84 ஆயிரத்தை தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் பணம் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக விவசாயிகள் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தினர் இடமும் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை மூன்று விவசாயிகளும் உடுமலைப்பேட்டையிலிருந்து கோவை வந்தனர்.
நேராக போத்தனூரில் உள்ள இடைத்தரகர் வீட்டிற்குச் சென்ற அவர்கள் வீட்டின் முன்பு பட்டு கூடிற்களுக்கான நிலுவைத் தொகை ரூபாய் 84 ஆயிரத்து உடனடியாக அளிக்க வேண்டும் எனக் கோரி பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சின்னவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் காளியப்பன் (45), செண்ணியப்பன் (42), காளிமுத்து (52), விவசாயிகளான இவர்கள் தங்கள் நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்று விவசாயிகளும் தன் நிலத்தில் விளைந்த வெண்பட்டு கூடுகளைக் கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலை இடைத்தரகர் இடம் கொடுத்தனர்.
இதற்கு ரூபாய் 84 ஆயிரத்தை தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் பணம் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக விவசாயிகள் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தினர் இடமும் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை மூன்று விவசாயிகளும் உடுமலைப்பேட்டையிலிருந்து கோவை வந்தனர்.
நேராக போத்தனூரில் உள்ள இடைத்தரகர் வீட்டிற்குச் சென்ற அவர்கள் வீட்டின் முன்பு பட்டு கூடிற்களுக்கான நிலுவைத் தொகை ரூபாய் 84 ஆயிரத்து உடனடியாக அளிக்க வேண்டும் எனக் கோரி பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.