கோவையில் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கில், வேலையில்லாமல் இருந்ததால் கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கோவை: கோவையில் கடந்த பல மாதங்களாக போலீசாருக்கு தண்ணிகாட்டிய விசித்திர நிர்வாண கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்துப் பிடித்தனர்.
விசாரணையில், இவர் இருசக்கர வாகன ஷோரூம் மற்றும் நான்கு சக்கர வாகன ஷோரூம்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்து வந்ததாக தெரிகிறது.
ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்குத் தாவுவதும், நிர்வாண கோலத்தில் ஷோரூம்மில் திரிந்து கொள்ளையடித்துச் செல்வது போன்ற சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.
கோவை இராமநாதபுரம், பொள்ளாச்சி, சென்னை, ஈரோடு, மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நிர்வாண கோலத்தில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நிர்வாண கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் பழய வழுக்கு தெருவை சேர்ந்த கோச்சடை என்ற பாண்டியன் என்பது தெரியவந்தது.
இவன் கோவையில் ஒரு ஹோட்டலில் பணியாற்றிவந்த நிலையில் கொரோனா ஊரடங்கில், வேலையில்லாமல் இருந்ததால் இந்த கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.