கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது..!

தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த பனியன் தொழிலாளி நாகராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் நாகராஜ் (27) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் முகநூலில் அடிக்கடி தொடர்பு கொண்டு பழகி வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது. நாளடைவில் நாகராஜ் அந்த கல்லூரி மாணவியிடம் தான் காதலிப்பதாக கூறினார். இதனை நம்பி கல்லூரி மாணவியும் அவரை காதலித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் அந்த மாணவியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நமது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் தன்னுடன் வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை உன்மை என நம்பிய மாணவியும் திருமணத்துக்கு சம்மதித்தார். சம்பவத்தன்று நாகராஜ் தான் கோவை வருவதாகவும் தயாராக இருக்கும்படியும் மாணவியிடம் கூறி உள்ளார். அதன்படி மாணவி தயாரானார்.

கோவை வந்த நாகராஜ் கல்லூரி மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்றார். பின்னர், தான் தங்கி இருந்த வீட்டில் வைத்து மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவி போல வாழ தொடங்கினர்.

நாளடைவில் நாகராஜ் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் பயந்து போன மாணவி நாகராஜிடம் இருந்து தப்பித்து வீடு திரும்பினார். பின்னர் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை கடத்தி சென்ற நாகராஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த பனியன் தொழிலாளி நாகராஜை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...