கோவையில் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி விழுந்து பலி.!!

கோவை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சுல்தான் பேட்டை செஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 28, டிரைவர். இவர் ஒன்றரை வயது மகள் சுருதி ஸ்ரீமான் நேற்று சதீஷ்குமாரின் சகோதரர் வீட்டு முன்பு ட்ராக்ட்ரரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

அப்பொழுது அங்கு வந்த சுருதி மற்றும் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது டிராக்டர் மீது மூன்று குழந்தைகளும் ஏறி விளையாடின எதிர்பாராதவிதமாகச் சுருதி டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

அந்த குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினார்கள். இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து சுல்தான் பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது சிறுமி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...