கோவை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த சுல்தான் பேட்டை செஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 28, டிரைவர். இவர் ஒன்றரை வயது மகள் சுருதி ஸ்ரீமான் நேற்று சதீஷ்குமாரின் சகோதரர் வீட்டு முன்பு ட்ராக்ட்ரரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அப்பொழுது அங்கு வந்த சுருதி மற்றும் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது டிராக்டர் மீது மூன்று குழந்தைகளும் ஏறி விளையாடின எதிர்பாராதவிதமாகச் சுருதி டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
அந்த குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினார்கள். இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இது குறித்து சுல்தான் பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது சிறுமி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.