500, 1000 ரூபாய் தடையால் வேலையிழந்த தங்கநகைத் தொழிலாளி தற்கொலை

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் வேலையில்லாத காரணத்தால் கோவையில் தங்கநகை தொழிலாளி தற்கொலை செய்து உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மா.ந.க வீதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அப்பகுதியில் தங்க சங்கிலிகளை கட்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்தார். இதனிடையே, மத்திய பா.ஜ.க அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து இவரது தொழிலில் கடந்த சில மாதங்களாக தொய்வு ஏற்பட்ட காரணத்தால் முருகானந்தம் மன உளைச்சலுடன் காணப்பட்டதுடன் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீதேவி குழந்தைகளுடன் ஞாயிறன்று காலையில் வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்தபோது முருகானந்தம் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து முருகானந்தத்தை மீட்டபோது தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வெறைட்டிஹால் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு காரணமாக தற்போது வேலையில்லாத நிலை உள்ளதாகவும், வேலை செய்த கூலி பணத்தை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் முருகானந்தம் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் தங்கநகை உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...