ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய ரயில்பாதையை தென்னக ரயில்வே மீட்டெடுக்க வேண்டும்; கோவையின் வளர்ச்சிக்கு உதவ உடனடி நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கோவையில் தற்போது நிலவும் ரயில்போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய ரயில்பாதையை தென்னக ரயில்வே மீட்டெடுப்பதோடு அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் நஞ்சுண்டாபுரம் மற்றும் ராமநாதபுரம் இடைப்பட்ட பகுதியில் இணைப்பு ரயில்பாதை ஒன்று செயல்பட்டுவந்தது.

கடந்த 1891 ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் பாதை கோவையில் இருந்து போத்தனூர் செல்லும் ரயில் பாதையையும், இருகூரிலிருந்து போத்தனூர் செல்லும் ரயில்பாதையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவை மக்களுக்கான முதல் ரயில் சேவைக்கான பாதை என்றே இதனை கூறலாம். இதோடு பழமை வாய்ந்த நீலகரி எக்ஸ்பிரஸ் ஓடிய ரயில் பாதையாகவும், கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பெசாவர் நகருக்கு இயக்கப்பட்ட கிராண்டிரங்க் இணைப்பு எக்ஸ்பிரஸ் சென்று வந்த தடம் என்ற பெருமையை இதுக்கொண்டிருந்தது. ஆனால் 1.15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதை தென்னக ரயில்வே மூலம், கோவையிலிருந்து வடகோவை, பீளமேடு வழியாக இருகூர் செல்லும் ரயில்பாதையாகப் பிரிக்கப்ட்ட பிறகு அந்த பாதை எங்கு சென்றதே என தெரியவில்லை.

ஆனால் தற்போதும் எந்தவித அக்கிரமிப்பும் இல்லாமல் அப்படியே தான் உள்ளது. எனவே கோவையில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க தென்னக ரயில்வே இந்த சிறிய இணைப்பு ரயில்பாதைத்திட்டத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளும் போது மேட்டுப்பாளையம் வரை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரசுக்கு இன்ஜின் மாற்றத்தேவையில்லை, கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்களை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கலாம், இதோடு கோவை ரயில் நிலையத்தின் வெளியே சிக்னல்காகவும், பிளாட்பாரத்திற்காகவும் ரயில்கள் நிற்க வேண்டிய நேரம் வெகுவாக குறைவது போன்ற பல நன்மைகள் உள்ளன.

எனவே இனிவரும் நாள்களில் சுற்றுவட்டார பகுதிகளில் புறநகர் மின்சார ரயில்களை இயக்கவும் இந்த சிறிய ரயில் பாதை மிகவும் உதவியாக இருப்பதால், தென்னக ரயில்வே வாரியம் உடனடியாக தலையிட்டு இதுவரை யாருக்கும் தெரியாத இந்த ரயில்பாதை மீட்டெடுக்க வேண்டும் எனவும், உடனடியாக அளவீடு செய்து கோவையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் கோரிக்கையாகவும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...