வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும்; கோவையில் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள்!

விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு கையொழுத்திட்ட வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லாடிவிடில் தமிழகத்தில் போராட்டம் தொடரும் என கோவையில் விவசாய சங்கத்தினர் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, பொதுத்துறை சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களைக் கண்டித்து நாடுமுழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.



அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்னதாக நடைபெற்றப் போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கலந்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போரட்டத்தின் போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறுகையில், வேளாண் சட்டத்திற்கு எதிரானப்போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளுக்கு மரியாதைச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்டு வெளியான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் எனவும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராகவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நடைபெறுகின்ற போராட்டம் மக்களுக்களுக்கான போராட்டம் என்று நினைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் பேசிய சு. பழனிசாமி, இன்று பாரத் பந்த்தை அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்ததன் அடிப்படையில் ரயில் மறியல்கள், சாலை மறியல்கள், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றுருவருகிறது. எனவே மக்களின் நலனைக்காப்பதற்குக் கோவை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னேடுப்போம் எனவும் விவசாயிகள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டி சட்டம் நிறைவேற்றப் பட்டநிலையிலும், தொடர்ந்து விவசாயிகள் மீது வழக்குகளைக் காவல் துறை போட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்குகளைத் திரும்ப பெறும் வரையிலும் நம்முடையே போராட்டம் தொடர வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக பொதுமக்கள் இப்போராட்டத்தை நடத்தக் காரணமாக இருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு எனவும் கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசு இத்தகையை சட்டங்களை உடண்டியாக திரும்ப பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...