திருப்பூர் - விஜயாபுரம் அரசு பள்ளி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டார்.
திருப்பூர்: திருப்பூர் - விஜயாபுரம் அரசு பள்ளி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 3-ம் கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 18-வயதிற்கு மேற்பட்டவர்கள் 20-லட்சத்து 77-ஆயிரத்து 9- பேர் உள்ளனர். இதுவரை 14-லட்சத்து 55-ஆயிரத்து 387-பேருக்கு முதல் தவணையும், 3-லட்சத்து 9-ஆயிரத்து 682-பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 6-லட்சத்து 21-ஆயிரத்து 708-பேருக்கு முதல் தவணையும், 58-ஆயிரத்து 536-பேருக்குப் பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. முதற்கட்டமாகக் கடந்த 12-ந் தேதி நடந்த முகாமில் 1-லட்சத்து 23-ஆயிரத்து 163- பேருக்கும், 2-ம் கட்டமாகக் கடந்த 19-ந்தேதி நடந்த முகாமில் 89-ஆயிரத்து 379-பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் 3-வது கட்ட சிறப்பு முகாமில் 80-ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தடுப்பூசி முகாமில் 631-நிலையான முகாம்களிலும், 41- நடமாடும் முகாம்கள் என 672-மையங்களில் காலை 7-மணி முதல் இரவு 7- மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 2-ஆயிரத்து 688-பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று திருப்பூர் விஜயாபுரம் அரசு பள்ளியில் நடந்த முகாமினை எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டார். இந்த சிறப்பு முகாமானது மாலை ஏழு மணி வரை நடைபெறுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 3-ம் கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 18-வயதிற்கு மேற்பட்டவர்கள் 20-லட்சத்து 77-ஆயிரத்து 9- பேர் உள்ளனர். இதுவரை 14-லட்சத்து 55-ஆயிரத்து 387-பேருக்கு முதல் தவணையும், 3-லட்சத்து 9-ஆயிரத்து 682-பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 6-லட்சத்து 21-ஆயிரத்து 708-பேருக்கு முதல் தவணையும், 58-ஆயிரத்து 536-பேருக்குப் பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. முதற்கட்டமாகக் கடந்த 12-ந் தேதி நடந்த முகாமில் 1-லட்சத்து 23-ஆயிரத்து 163- பேருக்கும், 2-ம் கட்டமாகக் கடந்த 19-ந்தேதி நடந்த முகாமில் 89-ஆயிரத்து 379-பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் 3-வது கட்ட சிறப்பு முகாமில் 80-ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தடுப்பூசி முகாமில் 631-நிலையான முகாம்களிலும், 41- நடமாடும் முகாம்கள் என 672-மையங்களில் காலை 7-மணி முதல் இரவு 7- மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 2-ஆயிரத்து 688-பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று திருப்பூர் விஜயாபுரம் அரசு பள்ளியில் நடந்த முகாமினை எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டார். இந்த சிறப்பு முகாமானது மாலை ஏழு மணி வரை நடைபெறுகிறது.