முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு 5000- ரூபாய், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 2500-ரூபாயும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் துணை அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன் ஏற்பாட்டில் மாரத்தான் போட்டி இன்று மகாலிங்க புரம் ரவுண்டானா அருகே நடைபெற்றது.
இப்போட்டியைக் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் 5-வயது முதல் 60-வயதினருக்கு, பொள்ளாச்சியிலிருந்து ராசக்காபாளையம் வரை 7-கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பெண்கள் பிரிவினருக்குப் பெண்கள் பிரிவில் 8-வயது முதல் 40-வயது உட்பட்டவர்கள் பொள்ளாச்சியிலிருந்து புளியம்பட்டி வரை 5-கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு 5000- ரூபாய், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 2500-ரூபாயும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் துணை அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன் ஏற்பாட்டில் மாரத்தான் போட்டி இன்று மகாலிங்க புரம் ரவுண்டானா அருகே நடைபெற்றது.
இப்போட்டியைக் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் 5-வயது முதல் 60-வயதினருக்கு, பொள்ளாச்சியிலிருந்து ராசக்காபாளையம் வரை 7-கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பெண்கள் பிரிவினருக்குப் பெண்கள் பிரிவில் 8-வயது முதல் 40-வயது உட்பட்டவர்கள் பொள்ளாச்சியிலிருந்து புளியம்பட்டி வரை 5-கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10-ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு 5000- ரூபாய், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு 2500-ரூபாயும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.