நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தகவல்


நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பண பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர்  யார் என்பது குறித்து அந்த கட்சியின்பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும் எனவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் நிலவிவரும் பணப்பிரச்சனைக்கு நிதி அமைச்சகம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இதை அணுகியதுதான் காரணம் எனவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக சிறியதாக இருப்பதால் அவற்றை ஏடிஎம் மையங்கள் மூலம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுப்பிபிரமணியசுவாமி அப்போது தெரிவித்தார்.

மேலும், தன்னுடைய தலைமையில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற விவகாரம் தொடர்பான கூட்டம் நடந்த போது தான் 4 விதமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கியதாகவும், அவை கடைபிடிக்கபடவில்லை என குற்றம்சாட்டிய அவர் இந்த திட்டம் அறிவிக்கப்படும் முன்னரே இதுகுறித்து வெளியில் கசிய விட்டவர்கள் மீது வழக்குப்பதியக் கோரி மூன்று முறை மத்திய அரசிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பொது அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...