கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற வைகோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து கோவையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து கோவையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு சென்றார். ஆப்போது திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்குள் செல்ல வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை நோக்கி செருப்பு மற்றும் கற்களை வீசினர். 

கருணாநிதியைக் காண வைகோ மருத்துவமனைக்கு வருவதாக திமுகவின் நிர்வாகிகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்திருந்த நிலையுலும் அசம்பாவிதம் நடைபெற்றதால் மருத்துவமனைக்குள் செல்லாமலேயே வைகோ திரும்பிச் சென்றார். 

திமுக-வினரின் இந்த எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து மதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் மாவட்ட மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...