7 வருட தொடர் முயற்சியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த கோவை மாணவன்..! குவியும் பாராட்டுகள்.!!

கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.


கோவை: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவில் தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33 வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதுகுறித்து நாராயண சர்மா கூறுகையில்:-

எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், அப்பா வெங்கடேஸ்வரா சர்மா, கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்டாக உள்ளார்.

அம்மா சுஜாதாவும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தான். நான் ஒரே மகன் கோவை கணுவாய் அஜந்தா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறோம்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் ஈஸிஇ படித்துள்ளேன். 2017 -ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன் கல்லூரியில் படிக்கும்போதே 2014 -ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ், தேர்வு எழுத பயிற்சி பெற்று 2018 -ம் ஆண்டு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றேன்.

அடுத்த ஆண்டு மெயின் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வு சென்றேன். தற்போது 3-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.

தொடர்ந்து ஏழு வருடங்களாக நான் செய்த முயற்சிக்கும் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறினார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...