ஆதரவற்றோர் பசியை தீர்க்கும் கோவை உணவு வங்கியின் வெற்றிகரமான 100-வது நாளில் 10 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாற்றம்


கோவை மாவட்டத்தில் பல ஆதரவற்றோர் இல்லங்களிலும், சாலையோரங்களிலும் ஏராளமான மக்கள் அன்றாடம் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் கோவை உணவு வங்கி (Food Bank Coimbatore) என்னும் தன்னார்வ அமைப்பினர் உணவு தயாரித்து பரிமாறிவருகின்றனர்.



இவ்வமைப்பு துவங்கப்பட்டு தற்போது 100-வது நாளாக ஆதரவற்றோர்களுக்கு உணவு பரிமாறுவதை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் இன்று கோவை வஊசி மைதானத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஸ்னவி நமது நிருபரிடம் கூறியதாவது:-



இவ்வமைப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுடன் 100-வது நாளை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று (சனி) மதியம் 3 மணியவில் இருந்து காய்கறிகளை வெட்டது துவங்கினோம். இன்று காலை 4 மணியவில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. நாங்கள் காய் பிரியாணி, தயிர்-வெங்காயம் மற்றும் இனிப்பு தயாரித்துள்ளோம். எங்களுடன் இணைந்து பலரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



இன்று சுமார் 10 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் 65 பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கும், சாலையோர மக்களுக்கும் பரிமாறப்பட உள்ளது. எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் இருந்து சபிதா மற்றும் அருண் ஆகிய ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது எங்களுடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.



இதுகுறித்து எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியயை சபிதா நம்மிடம் கூறுகையில், 

கோவை உணவு வங்கியின் இந்த சேவை பாராட்டுக்குறியது. தற்போது நாங்களும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்களுடன் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர். மாணவர்கள் சமைக்க உதவியும், அதனை பரிமாறுவதற்கும் முன்வந்துள்ளனர். 



ஆதரவற்றோர்களுக்கு என பல தன்னார்வ அமைப்பினர் செயல்பட்டு வந்தாலும் கோவை உணவு வங்கி அமைப்பினர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கல்லூரியில் உள்ள மற்ற ஆசியிர்களிடம் இதுகுறித்து கூறி இவ்வமைப்பில் இணைந்து பணியாற்ற செய்வோம்'' என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...