கோவையில் ராணுவ வீரர் போல் நடித்து ஆன்லைனில் கார் விற்பனை மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

65,000 ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் பழைய கார் வாங்க முயன்ற நபரிடம் ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தி 65,000 மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை, பொள்ளாச்சி, கோமங்கலம் புதூரைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (27). தனியார் நிறுவன ஊழியரான இவர் பழைய கார் வாங்க திட்டமிட்டு, இணையதள விளம்பரங்களை பார்த்தார். 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் இருப்பதை பார்த்தார்.

அதில் குறிப்பிடப்பட்ட மொபைல் போன் எண்ணில் அழைத்தபோது, தன்னை ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தி பேசியவர், தான் மதுக்கரையில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் பணி மாறுதலாகி செல்ல உள்ளதால் காரை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பணமாக, 65 ஆயிரம் ரூபாயை தன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் கூறியதை நம்பிய சிவராமகிருஷ்ணன், அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் 65 ஆயிரம் ரூபாயை செலுத்தினார்.

அதன்பின், அவர் போனை எடுக்கவே இல்லை. மதுக்கரை ராணுவ முகாமிற்கு சென்று விசாரித்தபோது, அப்படி யாரும் அங்கு பணியாற்றவில்லை என்பது உறுதியானது.

இதனையடுத்து, சிவராமகிருஷ்ணன் புகாரின்படி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...