கேரளாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தாக்கத்தால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிப்பு - வியாபாரிகள் வேதனை..!

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் வைரஸ் பாதிப்பு காரணமாக வியாபாரிகள் வர அனுமதி இல்லாததால் சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: கேரளாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தாக்கத்தால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாட்டு சந்தை பொள்ளாச்சியில் அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

கடந்த மூன்று வார காலமாக கொரோனா, மற்றும் ஜிகா வைரஸ் தொற்று காரணமாக சந்தை நடத்த கோவை மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது கூடுதல் தளர்வுகளாக உள்ளூர் வியாபாரிகளை கொண்டு மாட்டு சந்தை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, இன்று மாட்டு சந்தை இயங்கியது. ஆனால், வெளி மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்தும் வைரஸ் பாதிப்பு காரணமாக வியாபாரிகள் வர அனுமதி இல்லாததால் இன்று சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக வருத்தம் தெரிவித்த வியாபாரிகள், சந்தை நடத்த தங்களுக்கு கூடுதல் தளர்வுகள் விதித்து தங்களை காக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...