கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், பிரதமர் மோடி பிறந்தநாளன்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும், பாரத ஜனதா கட்சியின் சார்பில் காந்திபார்க் சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், பிரதமர் மோடி பிறந்தநாளன்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும், பாரத ஜனதா கட்சியின் சார்பில் காந்திபார்க் சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், கடந்த 17 ஆம் தேதி கொண்டாடப்பட்ட பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி கார்வேந்தன், கண்டன உரையாற்றினார். தேசிய இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், முரளி, தாமு, துணைத்தலைவர்கள் மதன், மோகன் பொருளாளர் முருகேஷ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பிரேம்குமார், துணைத்தலைவர் சிவானந்தம் மற்றும் மண்டல தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், கடந்த 17 ஆம் தேதி கொண்டாடப்பட்ட பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி கார்வேந்தன், கண்டன உரையாற்றினார். தேசிய இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், முரளி, தாமு, துணைத்தலைவர்கள் மதன், மோகன் பொருளாளர் முருகேஷ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பிரேம்குமார், துணைத்தலைவர் சிவானந்தம் மற்றும் மண்டல தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.