சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையம் தேர்வு.!!!

கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தை தேர்வு செய்து, ஐந்து பேருக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ்களும் சுழற் கோப்பையும் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தைக் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வு செய்து நிலைய காவலர்களுக்குப் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் குற்றத் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் துறையினருக்கும் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்குச் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களைக் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.



இதில் கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தைத் தேர்வு செய்யப்பட்டு பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணிக்கும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிலைய பதிவேடுகளைச் சிறப்பாகப் பராமரித்த எழுத்தாளர் என ஐந்து பேருக்குக் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ்களும் சுழற் கோப்பையும் வழங்கினார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...