விளாங்குறிச்சியில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு.. அதிகாரிகள் அதிரடி.!!

கடந்த 2018-ஆம் ஆண்டு, போலியாக வரைபடம் தயாரித்து பூங்கா, பொதுக்கீடு இடம் 39-சென்ட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.6-கோடி ஆகும். மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை விளாங்குறிச்சியில், மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.6-கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குறிச்சி, 32-ஆவது வார்டில் தனியார் சார்பில் லே-அவுட் அமைக்கப்பட்டு, அதில் உள்ள 33-மனைகளில் 12-மனைகள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு, மீதமிருந்த 12-மனைகள் இடைத்தரகர்கள் மூலமாக பல்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டன.

விளாங்குறிச்சி ஊராட்சியாக இருந்த போது, இந்த லே-அவுட்டில் இருந்த பூங்கா மற்றும் பொதுக்கீடு இடங்கள் ஆவணங்களில் காண்பிக்கப்படவில்லை. கடந்த 2011-ஆண் ஆண்டு விளாங்குறிச்சி, மாநகராட்சியுடன், 32-ஆவது வார்டில் இணைக்கப்பட்ட பிறகும், மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகளால் பூங்கா, பொதுக்கீடு இடம் குறிப்பிடப்படாததைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, போலியாக வரைபடம் தயாரித்து பூங்கா, திறவிடம் 39-சென்ட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.6-கோடி ஆகும். மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.



இதனை அடுத்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தை மீட்டுள்ளனர். தற்போது அந்த இடத்தில் இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...