கோவை ரத்தினபுரியில் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்!

கோவை ரத்தினபுரியில் அனுமதிக்கு மாறாக கூடுதலாக அடுக்கு மாடி குடியிருப்புகளைக்கட்டிய 2 பேரின் கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தின் கீழ் இரத்தினபுரி விநாயகர் கோவில் வீதி உள்ளது.

இப்பகுதியைச்சேர்ந்த இருவர் அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டுவதற்காக மாநகராட்சியின் நகரமைப்பின் கீழ் அனுமதிபெற்றிருந்தனர். அதில் சந்திரசேகர் என்பவர், இரத்தனபுரி விநாயகர் கோவில் வீதியில், 2 மாடியோடு 2 குடியிருப்புகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் அதில் மாநகராட்சியின் அனுமதியை முறையாகப் பின்பற்றாமல், கூடுதலாக 4 மாடிக்கட்டிடம் மற்றும் 9 குடியிருப்புகளைக் கட்டியுள்ளார்.

இதேப்போன்று அதேப்பகுதியைச் சேர்ந்த, சுலோச்சனா என்பவர் 2 மாடி மற்றும் 4 குடியிருப்புகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அந்த அனுமதிக்கு மாறாக கூடுதலாக 4 மாடிக்கட்டிடம் மற்றும் 16 குடியிருப்புகளை அங்கே கட்டியுள்ளார்.



இதனையடுத்து அப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, விதிமுறை மீறி கட்டியுள்ள அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கான அனுமதியை ரத்து செய்ததோடு, மாநகராட்சியின் கட்டிட அனுமதிக்கு மாறாக உள்ளதாக தெரிவித்து இவ்விரு கட்டிடங்களையும் பூட்டியதோடு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...