திருப்பூரில் பல்லடம் பெரியார் நகரைச்சேர்ந்த இளைஞர் உடல் முழுவதும் தீக்காயத்துடன் வீதியில் ஓடிய காட்சிகள் சிசிடிவில் பதிவாகி அனைவரையும் அதிர்ச்சியி்ல ஆழ்த்தியுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட சண்டைதான் காரணம் என தெரியவருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரைச்சேர்ந்தவர் 38 வயதான மாணிக்கம். அப்பகுதியில் கட்டிடத்தொழில் மேற்கொண்டு வரும் தன்னுடைய மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த இவர் கணவன் மனைவி போன்றே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்ததாகக்கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சந்தேஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள வீட்டார்கள் இவர்களை சமானதானப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காலை மாணிக்கம் மற்றும் இவரது கள்ளக்காதலி துர்க்கை அம்மாள் என்பவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், வீட்டில் இருந்து தீடிரென உடல் முழுவதும் தீக்காயத்துடன் மாணிக்கம் வீதிக்கு வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என கதறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் உடலின் மீது கள்ளக்காதலி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களிலிருந்து கூறப்படுகிறது.
இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் தான், ஏற்கனவே 90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

ஆனால் தற்போது இவர் உடல் முழுவதும் தீக்காயத்துடன் தெருவில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகிறது. எனவே இச்சம்பவம் எப்படி நடைபெற்றது? யார் காரணம்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த இவர் கணவன் மனைவி போன்றே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்ததாகக்கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சந்தேஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள வீட்டார்கள் இவர்களை சமானதானப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காலை மாணிக்கம் மற்றும் இவரது கள்ளக்காதலி துர்க்கை அம்மாள் என்பவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், வீட்டில் இருந்து தீடிரென உடல் முழுவதும் தீக்காயத்துடன் மாணிக்கம் வீதிக்கு வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என கதறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் உடலின் மீது கள்ளக்காதலி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களிலிருந்து கூறப்படுகிறது.
இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் தான், ஏற்கனவே 90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
ஆனால் தற்போது இவர் உடல் முழுவதும் தீக்காயத்துடன் தெருவில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகிறது. எனவே இச்சம்பவம் எப்படி நடைபெற்றது? யார் காரணம்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.