திருப்பூரில் வீட்டுமனையைப்பெற்று பல மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவருகிறார் மணிமாறன்.
இவர் அங்குள்ள மக்களுக்குத் தவணை முறை அடிப்படையில், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைப்பெற்றுக்கொண்டு, பெருமாநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்களை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், நம்பிக்கையுடன் மக்கள் பலர் வீட்டுமனைகளை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பத்திரப்பதிவு செய்ய வருமாறு ரியல் எஸ்டேட் மணிமாறனை பல முறை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரச்சொன்னாலும் அவர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டினை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைக்கின்றனர். மேலும் ஏன் பணம்கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பட்டாவிற்கு பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறீர்கள்? என கேட்டும் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுத்துத்தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் செய்த பின்னர், இப்பிரச்சனைக்குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
இவர் அங்குள்ள மக்களுக்குத் தவணை முறை அடிப்படையில், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைப்பெற்றுக்கொண்டு, பெருமாநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்களை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், நம்பிக்கையுடன் மக்கள் பலர் வீட்டுமனைகளை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பத்திரப்பதிவு செய்ய வருமாறு ரியல் எஸ்டேட் மணிமாறனை பல முறை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரச்சொன்னாலும் அவர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டினை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைக்கின்றனர். மேலும் ஏன் பணம்கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பட்டாவிற்கு பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறீர்கள்? என கேட்டும் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுத்துத்தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் செய்த பின்னர், இப்பிரச்சனைக்குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.