மத்திய அரசைக்கண்டித்து உடுமலைப்பேட்டை தாலுகாவில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்; 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்!

மத்திய அரசின் மக்கள் விரோதக்கொள்கையைக்கண்டிக்கும் விதமாக உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள கணக்கம்பாளையத்தில் திமுக தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மத்தியில் பாஜக அரசு பதவி வகித்த நாள் முதல் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டுவருகிறது.

குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது போன்ற மக்கள் விரோதக் கொள்கைகளைத்தான் கடைப்பிடித்துவருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள கணக்கம்பாளையத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கணக்கம்பாளையம் திமுக ஒன்றியசெயலாளர் எஸ்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வி.செளந்தரராஜன், திமுகவைச் சேர்ந்த இரா.லோகநாதன். நாகராஜன், ஊராட்சி துணை தலைவர் பாஸ்கர் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ரணதேவ், மார்க்ஸிஸ்ட் கட்சி செயலாளர். திருமலைசாமி,மதிமுக செயலாளர். வைரவேல், காங்கிரஸ் கட்சியின் நகரதலைவர் கோ.ரவி. மற்றும் உடுமலை நகரில் முன்னாள் நகரமன்ற தலைவர் வேலுசாமி தலைமையிலும் மடத்துக்குளம் துங்காவி பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...