உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சாதனையாளர் ரதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை: ஒற்றைக் காலை தூக்கியபடி 10-கிலோ எடையை சுமந்தபடி 30-வினாடியில் 42-தண்டால் எடுத்து கோவை இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
கோவை நேரு நகரை சேர்ந்தவர் ரதீஷ் குமார். பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவர் பிட்னஸ் கோச்சாக பணியாற்றி வருகிறார்.

ஒற்றைக் காலை தூக்கியபடி 10 கிலோ எடையை சுமந்து 30 வினாடியில் 42 தண்டால் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இவரது முயற்சியை 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
சாதனையாளர் ரதீஷ் குமார் கூறுகையில்," ஒற்றைக் காலைத் தூக்கியபடி தண்டால் எடுப்பது எளிதல்ல. அதுவும் 10-கிலோ எடையை சுமந்து 30-வினாடியில் 42-தண்டால் எடுத்து நான் சாதனை படைத்துள்ளேன். கின்னஸ் ரெக்கார்டு 30-வினாடியில் 39-தண்டால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். அதற்கு 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.
கோவை நேரு நகரை சேர்ந்தவர் ரதீஷ் குமார். பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவர் பிட்னஸ் கோச்சாக பணியாற்றி வருகிறார்.
ஒற்றைக் காலை தூக்கியபடி 10 கிலோ எடையை சுமந்து 30 வினாடியில் 42 தண்டால் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இவரது முயற்சியை 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
சாதனையாளர் ரதீஷ் குமார் கூறுகையில்," ஒற்றைக் காலைத் தூக்கியபடி தண்டால் எடுப்பது எளிதல்ல. அதுவும் 10-கிலோ எடையை சுமந்து 30-வினாடியில் 42-தண்டால் எடுத்து நான் சாதனை படைத்துள்ளேன். கின்னஸ் ரெக்கார்டு 30-வினாடியில் 39-தண்டால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். அதற்கு 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.