பட்டா வாங்கிய பயனாளிகள் வீடு கட்ட இடையூறு செய்து, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோவை: நில ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக அதிமுக நிர்வாகி மீது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், எங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து எங்கள் பகுதியில் வசிக்கும் அதிமுக வார்டு செயலாளர் மருதாசலம் என்பவர் பட்டா வாங்கிய பயனாளிகள் வீடு கட்ட இடையூறு செய்து, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், எங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து எங்கள் பகுதியில் வசிக்கும் அதிமுக வார்டு செயலாளர் மருதாசலம் என்பவர் பட்டா வாங்கிய பயனாளிகள் வீடு கட்ட இடையூறு செய்து, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.