வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

வால்பாறையில் குடியிருப்புப்பகுதிகளுக்குள் நுழைந்த காட்டுயானைகள், நியாய கடையை சேதப்படுத்தியது. எனவே அதிகரிக்கும் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெரும்பாலான யானைகள் வழித்தடங்கள் அனைத்தும் குடியிருப்புப்பகுதிகளாக மாறிவிட்ட நிலையில், வனத்திற்குள் இருந்து இரைத்தேடி காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகள் உலா வருவது வாடிக்கையாக மாறிவிட்டது. நேற்று வால்பாறை அருகே உள்ள ஈடியார் எஸ்டேட் பகுதிக்குள் 3 காட்டுயானைகள் நுழைத்து வீடுகள் மற்றும் நியாயவிலைக்கடைகளை சேதப்படுத்தியது.



இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வால்பாறை அருகே முடிஷ் எஸ்டேட் பகுதியில் உள்ள ரெட்ரோஸ் நியாயவிலைக்கடையில் நுழைந்த 3 காட்டுயானைகள் அக்கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்து அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை தின்று சேதப்படுத்தியது.



இதனைக்கண்ட மக்கள் அச்சத்தில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இனிமேலாவது காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...