தினமும் சராசரியாக 6 பேர் தற்கொலை செய்து கொள்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், 570 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் விபத்தில் பலியானவர்கள் மட்டும், 63 பேர் என தெரியவந்துள்ளது.
கோவை மாநகர், மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்கொலை, இயற்கைக்கு மாறான மரணங்கள், விபத்துகளை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படும் நபர்களுக்கு ஆலோசனை வழங்க, 'விடியல்' எனும் மையமும் துவங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநகர் காவல் நிலையங்களில் இந்தாண்டு 570 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
தினமும், சராசரியாக ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள கவுன்சிலிங் மையம் மூலம் தற்கொலைகளை குறைக்க முடியும் என போலீசார் நம்புகின்றனர்.
கோவை மாநகரில், விபத்து வழக்குகளும் அதிகரித்துள்ளன. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், வாகனப் போக்குவரத்து குறைந்திருந்ததால், விபத்து உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், விபத்து உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தாண்டு இதுவரை, 63 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இதையடுத்து, போக்குவரத்து விதிகளை தீவிரமாக அமல்படுத்த போலீசார் களமிறங்கியுள்ளனர்.
இதுதவிர, கோவை மாநகர காவல் நிலையங்களில் ஏழு கொலை, 31 கொலை முயற்சி, 51 வழிப்பறி, 96 கொள்ளை மற்றும் 294 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.
கோவை மாநகர், மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்கொலை, இயற்கைக்கு மாறான மரணங்கள், விபத்துகளை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படும் நபர்களுக்கு ஆலோசனை வழங்க, 'விடியல்' எனும் மையமும் துவங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநகர் காவல் நிலையங்களில் இந்தாண்டு 570 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
தினமும், சராசரியாக ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள கவுன்சிலிங் மையம் மூலம் தற்கொலைகளை குறைக்க முடியும் என போலீசார் நம்புகின்றனர்.
கோவை மாநகரில், விபத்து வழக்குகளும் அதிகரித்துள்ளன. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில், வாகனப் போக்குவரத்து குறைந்திருந்ததால், விபத்து உயிரிழப்புகள் ஒற்றை இலக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், விபத்து உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தாண்டு இதுவரை, 63 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இதையடுத்து, போக்குவரத்து விதிகளை தீவிரமாக அமல்படுத்த போலீசார் களமிறங்கியுள்ளனர்.
இதுதவிர, கோவை மாநகர காவல் நிலையங்களில் ஏழு கொலை, 31 கொலை முயற்சி, 51 வழிப்பறி, 96 கொள்ளை மற்றும் 294 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.