இந்த தூய்மை பணியானது இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 1500 கி.மீ சுற்றளவுக்கு இந்த பணியானது மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாபெரும் தூய்மை பணி முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
தமிழக முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையிலும் மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
அதில் கோவையில் 50 கி.மீ சுற்றளவுக்கு மாநகராட்சியின் 81வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் சுங்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த தூய்மை பணியானது இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 1500 கி.மீ சுற்றளவுக்கு இந்த பணியானது மேற்கொள்ளப்படும். இந்த பணியில் 1500 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்;
தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாபெரும் தூய்மைப் பணியாளர் முகாம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் முகாமின் நோக்கம் என்னவென்றால் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி மற்றும் மழைநீர் வடிகால் அமைத்து எளிதாக தண்ணீர் வெளியேறுவதற்கு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.