கோவையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி..!

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை அருகே காலம் துறையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (37). இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து முன்டந்துறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மனைவி தமிழரசி (30) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

இதனிடையே, முன்டந்துறை பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே அதி வேகத்தில் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இது குறித்து, காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...