கொள்ளையடிக்கப்பட்ட 59 பவுன் நகை மற்றும் 4.2 கிலோ வெள்ளி பொருட்களை பத்திரமாக மீட்ட போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர்.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே இன்ஜினியரின் வீட்டை உடைத்து 59 சவரன் நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே இடையார்பாளையத்தில் வசிப்பவர் கோபால் ராஜு (56). இவர் ரயில்வே என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், இவருடைய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 59 பவுன் நகை 4.2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், கோவை அத்தி பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணபுரத்தில் வசிக்கும் கண்ணன் (42) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து 59 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே இடையார்பாளையத்தில் வசிப்பவர் கோபால் ராஜு (56). இவர் ரயில்வே என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், இவருடைய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 59 பவுன் நகை 4.2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், கோவை அத்தி பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணபுரத்தில் வசிக்கும் கண்ணன் (42) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து 59 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.