கோவை நொய்யல் ஆற்றில் கணவனின் கண் முன்னே நீரில் மூழ்கிய மனைவி பரிதாபமாக பலி..!

தென்னமநல்லூர் - பூலுவபட்டி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற போது கணவனின் கண் முன்னே நீரில் மூழ்கி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை தென்னமநல்லூர் - பூலுவபட்டி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற போது கணவனின் கண் முன்னே நீரில் மூழ்கி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை, ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (28). இவர் ஒரு ஒர்க் ஷாப் ஊழியர். இவருக்கும், சரஸ்வதி (20) என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று ராஜேஷ் தனது மனைவி சரஸ்வதி உடன் தென்னமநல்லூர் - பூலுவபட்டி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது சரஸ்வதி நீரில் மூழ்கினார். ராஜேஷ், மனைவியை மீட்க முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர், சரஸ்வதியை தீயணைப்பு துறையினர் மீட்டு, பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...