பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி: ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் அருவியை மூடினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் அருவி திறக்கப்பட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து வந்த வகித்தனர்.
இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சக்திஎஸ்டேட், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனே அங்குக் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாறைகள், மரக்கிளைகள் அடித்து வரப்படும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் அருவியை மூடினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் அருவி திறக்கப்பட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து வந்த வகித்தனர்.
இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சக்திஎஸ்டேட், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனே அங்குக் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாறைகள், மரக்கிளைகள் அடித்து வரப்படும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் அருவியை மூடினர்.