தொழில் துறை வளர்ச்சிப்பணிகளில் களமிறங்கும் கோவை சிடார்க் நிறுவனம்; அரசிடம் நிதி மற்றும் நிதி அல்லாத உதவிக்கேட்டு வேண்டுகோள்!

கோவையில் தொழில்துறையில் தொலைநோக்குப்பார்வையோடு களமிறங்கியுள்ள சிடார்க் நிறுவனம், இதன் வெற்றியை உறுதி செய்வதற்கு அரசு நிதி மற்றும் நிதி அல்லாத ஆதவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக மூலப்பொருட்களின்‌ விலை அதிகரிப்பால் மற்றும்‌ எந்தவிதமான வியாபாரம் நடைபெறாமல் இக்கட்டான நிலை ஏற்பட்டது.

குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில்களின் வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. அதிலும் கோவையில் உற்பத்தியாளர்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. இந்த சூழலில் தான், சர்வதேச தரத்துடன் கூடிய செயல்திறனை மேம்படுத்தினால் மட்டுமே சிறு, குறு தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். இதனைக்கருத்தில் கொண்டு தான் சிடார்க் நிறுவனம், தொழில் துறை வளர்ச்சிப்பணிகளை மேம்படுத்துவதற் களமிறங்கியுள்ளது.

குறிப்பாக இதன்படி, கோவை நகரின்‌ தொழில்துறைக்கு ஆற்றல்மிகு அச்சானிகளான சிறு, குறு தொழில்‌ நிறுவனங்களின்‌ மேம்பாட்டுக்கு சிட்டார்க் நிறுவனம் தனி கவனம்‌ செலுத்தவுள்ளது. மேலும் சர்வதேச அளவிற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட தரமான கருவிகள்‌, கண்காணிக்க வேண்டியசெயல்‌ முறை போன்றவற்றில்‌ பயிற்சி அளிப்பகன்‌ மூலம்‌ சிறு, குறு தொழில்நிறுவனங்களின் அடுத்த நிலைக்கு முன்னேறக்கூடும். மேலும் தொலைநோக்குப் பார்வையுடன் சிறு,குறு நிறுவனங்களின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுளளது. இதன் மூலம் உலகம் முழுவதும் சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு சிட்டார்க் நிறுவனம் முயற்சிகளை எடுத்துவருகிறது. ஏற்கனவே உள்ள சேவைகளை தவிர கூடுதலாக, மின் தேக்கிகள், எடை அளவிடுதல், தங்க நகைகளை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் அதீத துல்லியமான கருவிகள் ஆகியவற்றைச்சோதெிக்கும் சேவைகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொழில்துறைக்கு அதிக அளவில் வருவாயை அதிகப்படுத்துவதற்கு அரசிடம் நிதி மற்றும் நிதி அல்லாத ஆதரவளித்தால் பெரும் உதவியாக இருக்கும் என சிட்டார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...