கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.!!

சாலையோரத்தில் நடந்து வந்த போது கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நடந்து சென்ற ஆறுச்சாமி மீது மோதியதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(64), கூலித் தொழிலாளியான இவர் கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டிலிருந்து சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாகக் கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நடந்து சென்ற ஆறுச்சாமி மீது மோதினார். இதில் ஆறுசாமிக்கு தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஆறுச்சாமியை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படுகாயம் அடைந்த ஆறுசாமியின் மனைவி நஞ்சம்மாள்(55) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று மாலை கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்ராஜ்(24) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...