பொள்ளாச்சியில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரை கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பி கைது.!!!

கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள குஞ்சி பாளையத்தில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரைக் கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள குஞ்சி பாளையத்தில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரைக் கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10-ஆம் தேதி பொள்ளாச்சி அருகேயுள்ளகுஞ்சி பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் வாகன விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்து இருப்பதாக மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று படுகாயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 10-ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து உயிரிழந்தவரின் உறவினர்களிடம் விசாரித்த போது கடந்த 10-ஆம் தேதி இரவு உயிரிழந்த இளைஞர் செந்தில்குமார் குஞ்சி பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் குடிபோதையில் வந்து தகராறு செய்தது தெரிய வந்தது.

அப்போது செந்தில்குமாரின் தந்தை கதிர்வேல் மற்றும் 16-வயதான இவரது இளைய மகன் இருவரும் சேர்ந்து செந்தில்குமாரைக் கம்பி கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மயங்கிய நிலையிலிருந்த செந்தில்குமாரை குஞ்சி பாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் வீசிவிட்டு வாகன விபத்தில் காயம் அடைந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில்குமாரின்தந்தை கதிர்வேல், மற்றும் 16-வயதான செந்தில்குமாரின் தம்பியைக் கைது செய்து மேற்கு காவல் நிலைய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...