பொள்ளாச்சியில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரை கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பி கைது.!!!

கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள குஞ்சி பாளையத்தில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரைக் கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள குஞ்சி பாளையத்தில் குடிபோதையில் தகராற்றில் ஈடுபட்ட இளைஞரைக் கம்பியால் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10-ஆம் தேதி பொள்ளாச்சி அருகேயுள்ளகுஞ்சி பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் வாகன விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்து இருப்பதாக மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று படுகாயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 10-ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து உயிரிழந்தவரின் உறவினர்களிடம் விசாரித்த போது கடந்த 10-ஆம் தேதி இரவு உயிரிழந்த இளைஞர் செந்தில்குமார் குஞ்சி பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் குடிபோதையில் வந்து தகராறு செய்தது தெரிய வந்தது.

அப்போது செந்தில்குமாரின் தந்தை கதிர்வேல் மற்றும் 16-வயதான இவரது இளைய மகன் இருவரும் சேர்ந்து செந்தில்குமாரைக் கம்பி கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மயங்கிய நிலையிலிருந்த செந்தில்குமாரை குஞ்சி பாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் வீசிவிட்டு வாகன விபத்தில் காயம் அடைந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில்குமாரின்தந்தை கதிர்வேல், மற்றும் 16-வயதான செந்தில்குமாரின் தம்பியைக் கைது செய்து மேற்கு காவல் நிலைய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...