வால்பாறையில் காவல்துறையின் தடையை மீறி ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்- நடவடிக்கை எடுக்க வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!!

வால்பாறை: வால்பாறையில் காவல்துறையின் தடையை மீறி ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறையில் காவல்துறையின் தடையை மீறி ஆற்றில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்தவாரம் ஆற்றில் குளித்த கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் மாயமான சோக சம்பவம் நடைபெற்றது.

ஆற்றில் மாயமான மாணவரைக் கண்டுபிடிக்க காவல்துறை தீயணைப்புத்துறை வனத்துறை கடலில் மூழ்கித் தேடும் நீச்சல் வீரர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் 10-நாட்களாகத் தேடி மாணவர் கிடைக்கவில்லை.



இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஆறுகளில் குளிக்கத் தடைவிதித்து காவல்துறை சார்பில் கூழாங்கல் ஆற்றில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக வால்பாறைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறைக்கு வந்துள்ளனர்.



இவர்கள் காவல் துறையின் தடை அறிவிப்பைப் பார்த்தும் தொடர்ந்து ஆற்றில் இறங்கிக் குளித்து வருகின்றனர்.

இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்தும் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்தும் வருகின்றனர். மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன் நகராட்சி வருவாய்த்துறை காவல் துறை இணைந்து சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...