தமிழக அரசின் பல்வேறு பிரிவில் பணிபுரிவோர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்




கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அலுவலர் அடிப்படை சிறப்பு பயிற்சி மையத்தில் இன்று அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமணம் செய்யப்படும் இளநிலை உதவியாளர்கள், நேரடி உதவியாளர்கள், தட்டச்சர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று உதவியாளர்களாக பணிபுரிபவர்கள், கருணை அடிப்படையில் நியமனம் பெறும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தற்சமயம், தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதால், அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதால் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் 9723 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

கோவை பயிற்சி மையமானது பெண்களுக்கான சிறப்பு பயிற்சி மையமாகும், இப்பயிற்சி வகுப்புகள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 243 அலுவலர்கள் கொண்ட முதல் அணிக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கி தொடர்ந்து 37 நாட்கள் என வரும் டிசம்பர் 2017 ஜனவரி 28ம் தேதியன்று நிறைவடையும். அடுத்தடுத்த அணிகளுக்கு இவ்வகுப்புகள் தொடர்ந்து ஜனவரி 2018 வரையில் நடைபெறும். 

இவ்வகுப்பில் அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொது மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, கணக்குகள் ஆகிய பாடதிட்டங்களின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்குமிட வசதி மற்றும் அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்டவைகளும் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகுப்பினால் பணி குறித்த பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், உடலளவில் மேம்படும் வகையிலான உடற்பயிற்சி வகுப்புகளும், உள்ளத்தினால் மேம்பட இறைவணக்கம் மற்றும் யோகா வகுப்புகளும் நடைபெறுகிறது. கடந்த முறை 2014 முதல் 2016 வரை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் 8 அணிகள் மூலம் 1650 பெண் பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்பினை அனைவரும் சிறந்த முறையில் கற்று தங்களது பணித்திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர் அடிப்படை சிறப்பு பயிற்சி மைய முதல்வர் மு.பாலச்சந்திரன், விரிவுரையாளர்கள் மு.சாமியப்பன், நரசிம்மன், கண்கானிப்பாளர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...