உடுமலைப்பேட்டையில் மலைவாழ் மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்.!!

திருப்பூர்: மலைவாழ் மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: மலைவாழ் மக்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இன்று இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மலைவாழ் மக்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்காக நடத்தப்பட்டது.

இவர்களது சட்ட ரீதியான பிரச்சனை மற்றும் வாழ்வியல் சூழல் பிரச்சினை போன்றவைகளில் இருந்து அவர்களை மீட்க இந்த முகாம் நடைபெற்றது. குறிப்பாக மலைவாழ் மக்கள் பலர் பெண் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.



அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதுபோன்ற பிரச்சினையிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த முகாமின் நோக்கம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.



பல மலைவாழ் மக்கள் இன்னமும் குடும்ப அட்டை மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த முகாம் மூலம் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டது.

மிகவும் ஏழ்மையாக உள்ள சில குடும்பத்திற்குக் கொரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் j.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி சார்பு நீதிபதி மணிகண்டன் மற்றும் சார்பு நீதிபதி பிரஷ்னேவ் அவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். மேலும் வருவாய்த்துறை, வனத்துறை, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...