தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் குளோபல் கேர் சென்டர் திறப்பு விழா

உலகிலுள்ள வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இத்தகைய காலகட்டத்தில் மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகின்றது.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாசுபட்ட இடத்தை சரிசெய்தலுக்கான சர்வதேச மாநாடு "இந்தியாவை தூய்மைப்படுத்தல் 2016" என்ற பெயரில் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையமும், நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றது.

இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக சர்வதேச சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான மையம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படுகின்றது. சர்வதேச கூட்டமைப்பான இந்த மையம், ஒவ்வொரு தனிமனிதனையும், அரசாங்கத்தையும், அறிவியலையும், தொழில்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் வழிநடத்துவதோடு, ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கவும் உறுதுணையாக அமைகிறது. 

உலக அளவில் மாசுபாட்டைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளையும் வகுத்து, மாசு கலப்படத்தைத் தவிர்த்துப் பசுமை உற்பத்தி கோட்பாட்டினை மேம்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது. 

இந்த மையத்தின் நோக்கமானது, மனிதனால் விளையும் மாசு கலப்படத்தினைக் குறைக்க, புதிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள, நவீன மதிப்பீட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்க, நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளையும் மேம்படுத்த, தலைசிறந்த வல்லுனர்களிடையே தகவல்களைப் பரிமாற்றம் செய்ய ஓர் உலகளாவிய இணையமாக விளங்குவதே ஆகும்.

மேலும், இந்த மையம் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிவுப் பகிர்விற்கு வழிவகுப்பதோடு மாணவர்களின் ஆய்வுகளுக்கும் தொழில் துறையின் மாசுபாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரை செய்யவும் பயனுள்ளதாக அமையும். இந்த அமைப்பானது தூய்மைமிகு சர்வதேச இணக்க நிலையைத் தனிநபர், அரசாங்கம், தொழில்துறை, சமூக அமைப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிடையே உருவாக்கும்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...