கோவையில் இந்தியன் வங்கி சார்பாக சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு ஒரே நாளில்110 கோடி கடனுதவி

கோவை: இந்தியன் வங்கி சார்பாக கோவையில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் ஒரே நாளில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு 110 கோடி கடன் வழங்கியதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: இந்தியன் வங்கி சார்பாக கோவையில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் ஒரே நாளில் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு 110 கோடி கடன் வழங்கியதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் வங்கி சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கடன் முகாம், கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.

இது குறித்து, சென்னை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் பிரிவு கார்ப்பரேட் அலுவலக பொது மேலாளர் சுதாகரராவ் கூறியதாவது:

கொரோனாவால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களை கைதுாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இதற்கான சிறப்பு நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவே, இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், காரைக்குடி ஆகிய எட்டு மண்டலங்களில் முகாம்கள் மூலம், 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.48 கோடி வணிக நிறுவனங்களுக்கான கடன் வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், உதவி மண்டல மேலாளர் விஜய்குமார், வர்த்தக பொது மேலாளர் கணேஷ் ராமன், கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, மண்டல மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...