கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோவை: நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களுக்கு, மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


கோவை: நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களுக்கு, மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெப்பச் சலனம் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைகிறது.இதனால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை மிக கன மழை பெய்யும். விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் கன மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் 29-ம் தேதியும்; நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30ம் தேதியும் மிக அதிக கன மழை பெய்யும். தேனி, விருதுநகர், துாத்துக்குடி, சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 29ம் தேதியும்; திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 30ம் தேதியும் கன மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மிக அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...